குஷ்பு மகள் திருமணத்தில் பலரும் கவனித்த ஒரு விஷயம் இதுவா? ஆச்சரியம்
குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களைப் பார்த்த பலரும் இந்த விஷயத்தை மட்டும் கவனித்திருக்கிறார்கள்.
நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், குஷ்பு பகிர்ந்த ஒரு விடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நடிகை குஷ்பு, மகள் திருமணத்தில் எடுத்தப் புகைப்படங்கள் விடியோக்களின் தொகுப்பை பகிர்ந்து வருகிறார். நேற்று அவர் பகிர்ந்த ஒரு விடியோவில், திருமணச் சடங்கு, அரங்கம், விருந்தினர்களின் விடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் பல விஷயங்களை அவரது ரசிகர்கள் கவனித்து அது குறித்து பதிவிட்டு வருகிறார்கள். அதாவது, குஷ்பு மகள் திருமணத்தில் இரண்டு தாலிகள் இருந்தது. முதலில் மஞ்சள் கயிறை எடுத்து மணமகன் மூன்று முடிச்சி போட்டு தாலி கட்டினார். பிறகு, தங்கத்தால் ஆன தாலியை மணமகளுக்கு அணிவித்ததோடு அவர் கண்கலங்கியதும் விடியோவாக பதிவாகி வைரலாகியிருந்தது.
Advertisement
Advertisement
அந்த விடியோவில், மணமகள் தவிர, முக்கிய பிரபலங்கள் அனைவருமே தங்க நிற உடையில் இருக்கிறார்கள். பொதுவாக மணமக்கள் தான் தனித்த நிற ஆடை அணிவார்கள். ஆனால், இங்கு மணமகளும் அதே தங்க நிற ஆடையில் ஜொலிக்க, மணமகள் மட்டும் வெளிர்சிவப்பு நிற ஆடையில் தேவதைப் போல வருகிறார்.
ஒட்டுமொத்த விருந்தினர்களும் எவ்வாறு தங்க நிற ஆடையில் வந்தனர். குஷ்பு அழைப்பிதழ் கொடுக்கும்போதே சொல்லிவிட்டாரா என்று கேள்விகள் எழுகின்றன.
Many people who viewed the photos of Khushbu's daughter's wedding celebrations noticed this one particular detail.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.