விரைவில் குக் வித் கோமாளி - 7: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
குக் வித் கோமாளியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்கவுள்ளது.
சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
Advertisement
Advertisement
மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் டிஆர்பி புள்ளிகளைக் காட்டிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிஆர்பி புள்ளிகள் எப்போதும் கூடுதலாகவே இருக்கும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்கவுள்ளார். இவருடன் இணைந்து கடந்த முறை குக்காக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
இம்முறையும் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. முந்தைய சீசன்களில் பங்கேற்ற கோமாளிகளும்(சமையல் தெரியதாவர்), புதிதாக சில கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.
முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற சுனிதா, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ள நிலையில், புதிய சீசன் தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
It has been officially announced that the new season of the show Cook with Comali will be aired soon on Vijay TV.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.