பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு!
பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
'சரங்கா' எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட மூத்த நடிகரான சுதேஷ் குமார், தனது 95வது வயதில் மூளை பக்கவாதம் ஏற்பட்ட உடன், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 1ஆம் தேதி காலமானார்.
நடிகர் சுதேஷ் குமார் தனது மறைவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏப்ரல் 30 வரை அங்கேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
Advertisement
பிரித்விராஜ் கபூரின் புகழ்பெற்ற நாடகக் குழுவின் வாயிலாகவே, அவர் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். 1931ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பிறந்த சுதேஷ் குமார், அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மருத்துவராக வேண்டும் என்பதே அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது. இருப்பினும், நடிப்புத் துறையின் மீது அவருக்கு இருந்த தீராத ஆர்வம், அவரைத் திரையுலகை நோக்கி ஈர்த்தது.