தேர்தலுக்கு முன் வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்: சேரன்
தவெக தலைவர் விஜய் குறித்து சேரன் பதிவு...
இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனங்களுக்கு வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.
அதன் முதல் அங்கமாக காங்கிரஸ் கட்சி தன் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைத் தவெக-வுக்கு வழங்கியுள்ளது. மேலும், இனிவரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்றே கூறியுள்ளது. இதனால், தவெகவுக்கு 113 எம்எல்ஏ-கள் உள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் தவெக தலைவர் விஜய்யைத் திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுன்வந்து வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான். எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.