முகப்பு
தமிழ்நாடு

தமிழக காவலர்களின் பாதுகாப்புக்கு பிற மாநில காவல்துறையை நாட வேண்டும்போல: பாஜக

தூத்துக்குடியில் காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவம் குறித்து தவெக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Updated On : 18 ஜூன் 2026, 9:41 pm IST
முதல்வர் விஜய் |பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் காவல் அதிகாரிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தவெக அரசை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களைக் கைது செய்ய சென்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திவிட்டு, குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்களின் பாதுகாப்புதான் கேள்விக்குறியாகி வருகிறது என்று பார்த்தால், சிங்கப்பெண் சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு பாலியல் தொல்லை, குற்றவாளிகளைப் பிடிக்க சென்றவர்களுக்கு அரிவாள் வெட்டு என காவலர்களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

போகிற போக்கைப் பார்த்தால், தமிழகக் காவலர்களின் பாதுகாப்புக்கே நாம் பிற மாநிலக் காவல்துறையின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் போல.

அக்மார்க் ரௌடிகளை எல்லாம் தமிழகத்தின் முக்கிய அமைச்சராக அமர்த்தினால், எஞ்சியுள்ள குற்றவாளிகளுக்கு அரசைக் கண்டால் இளக்காரமாகத் தானிருக்கும் என்பதை முதல்வர் விஜய் எப்போது உணர்ந்து தனது கட்சியை தூய்மைப்படுத்துகிறாரோ, அப்பொழுது தான் தமிழகத்தின் அமைதி உறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

summary

BJP has sharply criticized the TVK government regarding the attack on police personnel in Thoothukudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.