முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வரவேற்பு: 20 நாள்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்த கன்னட படம்!

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கியுள்ள படத்தின் சிறப்பான வரவேற்பு குறித்து...

கன்னட படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / அமேசான் பிரைம்.
பகிர்:

தேவி பிரசாத் ஷெட்டி இயக்கியுள்ள செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் படம் ஓடிடியில் 20 நாள்களில் 10 கோடி நிமிஷங்களைக் கடந்து அசத்தியுள்ளது.

நடிகர் விஜய் ராகவேந்திரா நடிப்பில் உருவான இந்தப் படம் கடந்த பிப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பின்னர், அமேசான் பிரைம் ஓடிடியில் ஏப்.17ஆம் தேதி வெளியாகிறது.

முன்னதாக, 2021ல் தேவி பிரசாத் ஷெட்டி இயக்கிய சீதாரம் பென்னி கேஸ். நம்.18 என்ற படத்தினை இயக்கி வந்தார். இதன் இரண்டாம் பாகமாக செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் படம் வெளியானது.

Advertisement

இந்தப் படத்துக்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை விட ஓடிடியில் அதிகமாக வரவேற்பு கிடைத்து வருகிறது. கன்னடத்தில் வெளியான இந்தப் படம் ஓடிடியில் தமிழிலும் வெளியாகியுள்ளது.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ஓடிடியில் வெளியான 20 நாள்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து மிகுந்த வரவேற்பைப் பெற்று அசத்தி வருகிறது.

summary

Second Case of Seetharam - 100M streaming minutes in just 20 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.