முகப்பு
செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றது தொடர்பாக...

ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன். - படம்: விடியோ கிளிப்
பகிர்:

தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றப் பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்துவைத்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

அவர்களுக்கும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

விஜய் முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

summary

After assuming office as the Chief Minister of Tamil Nadu, nine individuals took oath as ministers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.