சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!
எஸ்கே புரடக்ஷன்ஸ் அறிவிப்பு குறித்து...
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, மதுரை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வரிகளில், ‘வேலும் மயிலும்’ என்கிற பாடல் உருவாகியுள்ளது.
இதனை நாளை (மே. 13) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்பாடலை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். இது, சுயாதீன பாடலாக உருவாகியுள்ளது.
An announcement has been made regarding actor Sivakarthikeyan's new song.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.