முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!

எஸ்கே புரடக்‌ஷன்ஸ் அறிவிப்பு குறித்து...

சிவகார்த்திகேயன்
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, மதுரை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வரிகளில், ‘வேலும் மயிலும்’ என்கிற பாடல் உருவாகியுள்ளது.

இதனை நாளை (மே. 13) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்பாடலை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். இது, சுயாதீன பாடலாக உருவாகியுள்ளது.

An announcement has been made regarding actor Sivakarthikeyan's new song.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.