சேயோன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் விருந்து குறித்து...
நடிகர் சிவகார்த்திகேயன் சேயோன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்துள்ளார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன் மகன் பவன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் விருந்தளித்துள்ளார். இதன் விடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் சேயோன் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.