ரூட் மாஃபியாவை அம்பலப்படுத்த வேண்டும்: ஓவியா
ரூட் நிறுவனத்தைத் தாக்கிய ஓவியா...
நடிகை ஓவியா ரூட் தயாரிப்பு நிறுவனம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஓவியா பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.
தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலிக்காக விஜய்யைக் கைது செய்ய வேண்டுமென கூறி விஜய் ரசிகர்களின் தாக்குதல்களுக்கும் ஆளானார்.
Advertisement
இந்த நிலையில், ஓவியா இன்ஸ்டாகிராமில், “ரூட் மாஃபியாவை அம்பலப்படுத்த வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் மேலாளரான ஜெகதீஷ் பழனிச்சாமி நடத்திவரும் தயாரிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனமான ரூட் பல நடிகர்களின் சினிமா ஒப்பந்தங்கள் மற்றும் புரமோஷன்களை நிர்வகிக்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. ஷேஷம் மைக்-இல் ஃபாதிமா, ரிவால்வர் ரீட்டா, மகாராஜா திரைப்படங்கள் மூலம் நேரடியாக தயாரிப்பிலும் இந்நிறுவனம் இறங்கியது.
ஆனால், அண்மை காலமாக ரூட் தமிழ் சினிமாவின் மாஃபியா போல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. முக்கியமாக, திட்டமிட்டே சில நடிகர்களின் தொழில் வாழ்க்கையைக் கெடுப்பதாகவும் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக, நடிகை பிரியங்கா மோகன் இந்நிறுவனத்தின் பெயரைச் சொல்லாமல் தன்னைத் திட்டமிட்டுத் தாக்கியதாகக் கூறினார்.
இந்த நிலையில், நடிகை ஓவியாவும் குரல் கொடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக, முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பும் ஓவியா தன் கருத்தை தைரியமாகக் கூறியுள்ளார் என ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.