விவாகரத்தை அறிவித்தார் மௌனி ராய்!
மௌனி ராய் பகிர்ந்த விவாகரத்து அறிவிப்பு...
நடிகை மௌனி ராய் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான மௌனி ராய் கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிடுவதால் எப்போதும் ரசிகர்களின் கவனத்திலேயே இருக்கிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன் மௌனி ராயும் அவரது கணவர் சுரஜ் நம்பியார் இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் நட்பு நீக்கம் செய்ததுடன் திருமண புகைப்படங்களையும் நீக்கினர். இதனால், இருவரும் விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.
Advertisement
ஆனால், மௌனி ராய், “அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள். தவறான கதைகளைப் பரப்பாதீர்கள். தயவுசெய்து, எங்களுக்கான தனியுரிமையை (பிரைவசி) வழங்குங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மௌனி ராய் இன்ஸ்டாவில், "நாங்கள் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். எங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்து நிறைய போலிச் செய்திகள் பகிரப்பட்டு வைரலாகின. ஆனால், அவை எதுவும் எங்கள் உறவின் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. எங்களின் தனியுரிமையை மதித்தவர்களுக்கு நன்றி“ என விவாகரத்தை அறிவித்துள்ளார்.