1000 நாள்களை நிறைவு செய்து சாதனை! இதயம் தொடருக்கு குவியும் வாழ்த்து!
பல்லவி கெளடா நடிக்கும் இதயம் தொடர் ஆயிரம் நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடர் ஆயிரம் நாள்களை நிறைவு செய்துள்ளது. முதல் பாதியில் நடிகை ஜனனி அசோக் குமார் நாயகியாக நடித்த நிலையில், தற்போது பல்லவி கெளடா நாயகியாக நடித்து வருகிறார்.
ஆயிரம் நாள்களைக் கடந்த தொடரில் நடித்து வருவதை ரசிகர்களுடன் மிகவும் நெகிழ்ச்சியாக நடிகை பல்லவி கெளடா பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை பல்லவி கெளடா நாயகியாகவும், ரிச்சட் கோஷ் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
திருமணத்திற்கு பிறகான காதல், மகளின் மீதான பெற்றோரின் பாசம், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெறும் தொடராக இதயம் உள்ளது.
ஆகஸ்ட் 2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து 650 எபிஸோடுகள் இருக்கும்போது ஜனனி அசோக் குமார் விலகி, அவருக்கு பதிலாக பல்லவி கெளடா நடித்து வருகிறார்.
தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளதால், அந்த அனுபவத்தின் மூலம் இத்தொடரில் ஜனனி அசோக் குமாரின் இடத்தை பல்லவி கெளடா நிரப்பியுள்ளார் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இதயம் தொடர் 1000 நாள்களைக் கடந்துள்ளது. இதனை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உடன் நடிக்கும் நடிகர் ரிச்சட் கோஷுக்கு பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:
''1000 நாள்கள். இது தொலைக்காட்சியில் மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு சிறந்த கதையும் ஒவ்வொரு எபிஸோடுகளாக செதுக்கப்படுகிறது. ஆயிரம் எபிஸோடுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ரிச்சர்ட் கோஷுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரால் முடிந்த இடத்தில் எல்லாம் எனக்கு உதவியிருக்கிறார். எனக்காக என்றுமே துணையாக இருக்கும் எண்ணத்தை கொடுத்ததற்காக நன்றி. என்னவொரு அழகான பயணம் இது'' என பல்லவி பதிவிட்டுள்ளார்.
சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இதயம் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.