FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடக்க முடியாத இரவுகள்- 'பூதகாலம்': திரை விமர்சனம்

அம்மா, மகன், பாட்டி மூவரும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். ஒருநாள் பாட்டி இறந்து விடுகிறாள். பின், அந்த வீட்டில் இருப்பவர்கள் தொடர்ச்சியான அமானுஷ்ய சம்பவங்களை பார்த்து அச்சமடைகிறார்கள்.

1 பிப்ரவரி 2024, 1:42 pm IST
பகிர்:

அம்மா, மகன், பாட்டி மூவரும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். ஒருநாள் பாட்டி இறந்து விடுகிறாள். பின், அந்த வீட்டில் இருப்பவர்கள் தொடர்ச்சியான அமானுஷ்ய சம்பவங்களை பார்த்து அச்சமடைகிறார்கள்.

ஒருகட்டத்தில் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகிறது. இறுதியில் வீட்டில் இருந்தவர்கள் பேயிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் பூதகாலத்தின் கதை.

மகனாக வினு(ஷான் நிகம்), அம்மாவாக ஆஷா (ரேவதி) நடித்திருக்கிறார்கள். படத்தின்  சில எதிர்பாராத காட்சிகளில் ஷான் நடிப்பில் அசரடித்திருக்கிறார், குறிப்பாக, தன் பாட்டி இறந்து சில நாள் கழித்து அறையில் ஒரு காலடியைக் கண்டதும் கதவைத் திறக்கச் சொல்லி சத்தம் போடுவதும் நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆடும் காட்சியும் பார்வையாளர்களை அச்சமடையச் செய்பவை.

Advertisement

Advertisement

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான திரைப்படம் என்பதால் அதிக காட்சிகள் ஒரே வீட்டில் படப்பிடிக்கப்பட்டிருந்தாலும் தேர்ந்த ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திகிலைத் தருகிறது. 

ஒரு குறைந்த முதலீட்டில் பார்வையாளர்களை நகர விடமால் அடுத்தது என்ன என்கிற பதற்றத்தைப் படம் முழுவதும் கடத்தியிருக்கிறது படக்குழு.

தேவையற்ற காதல் காட்சிகள், ரேவதி திரும்பத் திரும்ப மருத்துவரைச் சந்திக்கும் காட்சிகள் போன்றவை படத்திற்கு சிறிய தொய்வைத் தருகிறது. 

இருப்பினும் இயக்குநர் ராகுல் சதாசிவன், இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஆகியோரின் பணியில் ஹாரர் படத்திற்கு உண்டான ‘இரு நுனிக்காட்சிகள்’ நிறைய இருப்பதால் ’பூதகாலம்’ ரசிக்க வைக்கிறது.

பூதகாலம்- சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments