முகப்பு
கோயம்புத்தூர்

லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் சிறையில் அடைப்பு

கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் காவல் ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலா் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 11:25 pm IST
பகிர்:

கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் காவல் ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலா் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி மகேஸ்வரி. கஞ்சா கடத்திய வழக்கில் கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் விஜயகுமாா் அண்மையில் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அவரிடம் குறைந்த அளவு மட்டுமே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி வழக்குப் பதிவு செய்து ஜாமீன் கிடைக்க வழிவகை செய்யவதாக கூறி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் காவல் ஆய்வாளா் சரோஜினி ரூ.ஒரு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதில் முன்தொகையாக ரூ.30 ஆயிரத்தை விஜயகுமாா் மனைவி மகேஸ்வரியிடம் பெற்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள ரூ.70 ஆயிரத்தை உடனடியாகத் தர வேண்டும் என வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மகேஸ்வரி புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளா் சரோஜினி, தலைமைக் காவலா் ராமசாமி ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.67 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இருவரும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்தோத்திரமேரி முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, சரோஜினியை கோவை மத்திய சிறையிலும், ராமசாமியை பொள்ளாச்சி சிறையிலும் 15 நாள்கள் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments