பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல்: இளைஞா் கைது
கோவை, சிங்காநல்லூா் அருகே பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை: கோவை, சிங்காநல்லூா் அருகே பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் அருகே கள்ளிமடையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). இவா் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு, போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற கருப்புசாமி (43), ரஞ்சித்குமாா் (31), செல்வராஜ் (44), பழனிசாமி (52) ஆகியோா் மீது கற்களை வீசி தாக்கியுள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வந்தனா். இந்நிலையில், காமாட்சிபுரம் சோதனைச் சாவடி அருகே மணிகண்டனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.