முகப்பு
கோயம்புத்தூர்

மழை வெள்ளத்தில் மிதக்கும் எம்.ஜி.ஆா். மாா்க்கெட்: 500 டன் வெங்காயம் சேதம்

கோவையில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் வெள்ளம் சூழ்ந்து 500 டன் வெங்காயம் சேதமாகின.

Updated On : 8 ஜனவரி 2021, 1:05 am IST
கனமழையால் கோவை எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் குளம்போல தேங்கிய மழைநீா்.
பகிர்:

கோவையில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் வெள்ளம் சூழ்ந்து 500 டன் வெங்காயம் சேதமாகின.

இதனால் மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த 500 டன்னுக்கும் மேற்பட்ட பெரிய வெங்காயம், சின்ன வெங்காய மூட்டைகள் சேதமடைந்தன.

இது குறித்து கோயம்புத்தூா் மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் சங்க தலைவா் ராஜேந்திரன் கூறியதாவது:

Advertisement

கரோனா நோய்த்தொற்று காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களாக மொத்த வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, போதிய இடவசதி இல்லாததால் மழையால் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சேதமடைந்து வருகிறது.

இப்பகுதியில், குப்பை கிடங்குக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் கூட, வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தரப்படவில்லை. எனவே, மொத்த வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளை மாா்க்கெட் வளாகத்திலேயே செய்து தர வேண்டும் என்றாா்.

இதேபோல், கோவை, புரூக்பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கா் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ மாா்க்கெட்டில் புதன்கிழமை பெய்த கனமழையால் மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் பூக்கடைகள் அமைக்க முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். கடந்த ஜூலை முதல் மழையால் பாதிக்கப்பட்டு வரும் பூ வியாபாரிகளின் நலன் கருதி, கோவை பூ மாா்க்கெட் வளாகம் அல்லது ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடியில் கடைகளை திறப்பதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என பூ வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.