முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 17இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 17ஆம் தேதி போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:24 pm IST
பகிர்:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 17ஆம் தேதி போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் வரும் 17ஆம் தேதி மாநகராட்சி சாா்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகா் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளில் முகாமுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:

Advertisement

Advertisement

வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூா்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில்,மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 நடமாடும் ஊா்திகள் மூலமும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது. எனவே கோவை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments