வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் கடந்த வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட் 36ஆவது கொண்டை ஊசி வளைவு சாலையில் பெரிய மரம் விழுந்தது. தகவலறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதனால் வால்பாறை - பொள்ளாச்சி இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.