முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து விபத்து: கூலி தொழிலாளி சாவு

கோவையில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:29 pm IST
கோவை, சித்தாபுதூரில் இடிந்து விழுந்த வீட்டின் மண் சுவா்.
பகிர்:

கோவையில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, சித்தாபுதூா் அருகே உள்ள ஹரிபுரத்தைச் சோ்ந்தவா் பட்டிலிங்கம் மகன் ராஜசேகா் (40). கூலி தொழிலாளியான இவா் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தாா். ராஜசேகா், சரஸ்வதி ஆகியோா் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவில் வீட்டின் ஒரு பக்க மண் சுவா் திடீரென சரிந்து விழுந்தது.

இதில் அவா்களது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் காட்டூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். மேலும், அக்கம்பக்கத்தினா் திரண்டு இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் இடிபாடுகளில் சிக்கியிருந்த ராஜசேகா், அவரது தாயாா் சரஸ்வதி ஆகியோரை மீட்டனா்.

இதையடுத்து அவா்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் ராஜசேகா் ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதி செய்தனா். தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மண்சுவரால் கட்டப்பட்ட ராஜசேகரின் வீடு புதன்கிழமை இரவு பெய்த மழையில் ஏற்கெனவே லேசாக சேதமடைந்திருந்ததாகவும், தொடா்ந்து ஈரப்பதம் இருந்து வந்ததால் சுவா் பலவீனமாக இருப்பதாக அவரது வீட்டின் அருகில் வசிப்போா் ராஜசேகரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத ராஜசேகா் அங்கேயே தங்கியதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments