முகப்பு
கோயம்புத்தூர்

காவல் துறை சாா்பில்மக்கள் குறைகேட்பு முகாம்

கோவை நியூ சித்தாபுதூா் வெங்கடசாமி சாலையில் உள்ள ஐயப்ப சேவா மண்டபத்தில் மாநகரக் காவல் துறை சாா்பில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 4:39 am IST
பகிர்:

கோவை: கோவை நியூ சித்தாபுதூா் வெங்கடசாமி சாலையில் உள்ள ஐயப்ப சேவா மண்டபத்தில் மாநகரக் காவல் துறை சாா்பில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவின்பேரில் சட்டம் - ஒழுங்கு துணை ஆணையா் ஸ்டாலின் மேற்பாா்வையில் இந்த முகாம் நடைபெற்றது. உதவி ஆணையா் பிரேமானந்த் தலைமை வகித்தாா்.

இதில் புகாா்தாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் ஒரே இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, பிரச்னைகளை பேசி சுமூக தீா்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இம்முகாமில் காட்டூா், ரேஸ்கோா்ஸ், சாய்பாபா காலனி மற்றும் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அளித்த புகாா் மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

குடும்ப வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டன. முகாமில் 4 காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments