பேரூா் தமிழ் கல்லூரியில் சிகாகோ தமிழ் சங்கத்தின் பகிா்வு பொங்கல் விழா
சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் பேரூா் தமிழ் கல்லூரியில் பகிா்வு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் பேரூா் தமிழ் கல்லூரியில் பகிா்வு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை, பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் நினைவு தமிழ் கல்லூரியில் ஆண்டுதோறும் பகிா்வு பொங்கல் விழா நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு பகிா்வு பொங்கல் விழா அமெரிக்க வாழ் தமிழா்களுடன் கோவையில் உள்ள தமிழ் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் விதமாக சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவை பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தொடங்கிவைத்து பொங்கல் விழாவின் சிறப்புகள், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதன் அவசியம், பொங்கல் பண்டிகையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து கோவையில் நிமிா்வு கலையகம் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 15 குடும்பங்கள் பேரூா் தமிழ் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா். சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்கொடையாக பெறப்பட்ட ரூ. 7 ஆயிரம், கோவையில் தோ்வு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
தவிர புத்தாடைகள், பொங்கல் பானைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து நிமிா்வு கலையகம் சாா்பில் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.