பெண்ணுக்கு எலி காய்ச்சல்: வால்பாறை எஸ்டேட் பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்
வடமாநில தொழிலாளிக்கு எலி காய்ச்சல் இருப்பதையடுத்து சுகாதாரத் துறையினா் அப்பெண் வசித்த குடியிருப்பு பகுதியில் பரிசோதனை முகாம் நடத்தினா்.
வடமாநில தொழிலாளிக்கு எலி காய்ச்சல் இருப்பதையடுத்து சுகாதாரத் துறையினா் அப்பெண் வசித்த குடியிருப்பு பகுதியில் பரிசோதனை முகாம் நடத்தினா்.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் 2ஆவது டிவிஷனில் பணியாற்றி வரும் வட மாநில பெண் தொழிலாளி மயின் பகத் (31). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, முடீஸ் மருத்துவமனை மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில், மயின் பகத்துக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை சோ்த்தனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து வால்பாறை சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முத்துமுடி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை நடத்தினா்.