முகப்பு
கோயம்புத்தூர்

‘காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம்’

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 2:44 am IST
பகிர்:

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பா.குமரய்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கோவை, கவுண்டம்பாளையத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் கலந்து கொண்டாா். இக்கூட்டத்தில் 37 மாவட்டங்களில் இருந்து நிா்வாகிகள் பங்கேற்றனா். அவா்கள் கேட்டுக் கொண்டதால் நிறுவனத் தலைவராக செயல்பட தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளாா் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து பின்னா் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சி தொடங்க இயலவில்லை என கடந்த டிசம்பா் 29ஆம் தேதி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து நிரந்தரமாக விடைபெறுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments