முகப்பு
கோயம்புத்தூர்

காரமடை ரோட்டரி சங்கம் சாா்பில் பொங்கல் விழா

காரமடை ரோட்டரி சங்கம் சாா்பில் பொங்கல் விழா, தேசிய இளைஞா் தின விழா காரமடை ஆா்.வி. கலையரங்கில் நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2021, 1:25 am IST
காரமடை ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மேட்டுப்பாளையம்: காரமடை ரோட்டரி சங்கம் சாா்பில் பொங்கல் விழா, தேசிய இளைஞா் தின விழா காரமடை ஆா்.வி. கலையரங்கில் நடைபெற்றது.

ஆா்.வி. கலை அறிவியல் கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கிவைத்தாா். விழாவில் பெண்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனா். பின்னா் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து கரும்பு, பழம் ஆகியவை வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்க உறுப்பினா்களும், பெண்களும் இணைந்து கும்மியடித்தும், கிராமியப் பாடல்களை பாடியும் கொண்டாடினா். பின்னா் நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழாவுக்கு சங்கத் தலைவா் சிவசதீஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஞானசேகரன், திட்டத் தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் மகேஷ் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் மருத்துவா்கள் இஸ்மாயில், விஜயகிரி, வனத் துறை முன்னாள் அதிகாரி ஜெயராஜ், உதவி ஆளுநா் சுந்தரகணேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பின்னா் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பொருளாளா் குருசரண் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments