வால்பாறையில் நாளை பொங்கல் சுற்றுலா விழா
வால்பாறையில் புதன்கிழமை (ஜனவரி 13) பொங்கல் சுற்றுலா விழா நடைபெற உள்ளது.
வால்பாறையில் புதன்கிழமை (ஜனவரி 13) பொங்கல் சுற்றுலா விழா நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் கூறியதாவது:
வால்பாறையில் முதல் முறையாக பொங்கல் சுற்றுலா விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை வரை ஒரு நாள் விழா நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி இணைந்து நடத்தும் விழாவில் தமிழக பாரம்பரிய முறைபடி கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.