முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் ஜனவரி 22 முதல் 3 நாள்கள் முதல்வா் பிரசாரம்

கோவை மாவட்டத்தில் ஜனவரி 22 முதல் 24ஆம் தேதி வரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 10:40 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கோவை: கோவை மாவட்டத்தில் ஜனவரி 22 முதல் 24ஆம் தேதி வரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையில் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடா்பாக, அதிமுக மாநகா் மாவட்டம், புறநகா் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

Advertisement

கோவை மாவட்டத்தில் ஜனவரி 22, 23, 24 ஆகிய 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, சின்னராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.