கவிதை நூல் வெளியீட்டு விழா
விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கவிஞர் ரா.தீபன்குமார் எழுதிய "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.கவிதை நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட முனைவர் இரத்தின.புகழேந்தி, திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், கவிஞர் செ.அமிர்தராசு வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் தலைமை ஏற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் மு.வள்ளியம்மை முன்னிலை வகித்தார்.திராவிடர் கழகப் பேச்சாளர் முத்து.கதிரவன், கவிஞர் கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்டப் பொருளர் மாய.முனுசாமி, ஜெகதீஸ்வரன், பிச்சைமொஷிதீன், கவிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் ரா.தீபன்குமார் நன்றி கூறினார்.
Advertisement
Advertisement