குடிநீர் வசதி செய்துத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
÷வக்காரமாரி, மடப்புரம் கிராமங்களின் சுமார் 600 வீடுகள் உள்ளன.
Advertisement
÷இந்நிலையில், கடந்த மூன்று மாதக்காலமாக இப்பகுதிகளில் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது.
÷இதனால் கிராம மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
÷மேலும் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
÷எனவே இக்கிராமங்களில் தாற்காலிக கைபம்பு மூலம் மின்மோட்டார் அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு குடிநீர் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும்.
÷ மேலும் நிரந்திரமாக இக்கிராமங்களில் மாற்று இடத்தில் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.