பெண்ணிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் திருட்டு
சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார்
சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
÷சிதம்பரம் அருகே உள்ள கிள்ளைப்பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36).
÷இவர், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஓர் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தார்.
Advertisement
Advertisement
÷பின்னர் அடமானப் பணமான ரூ.60 ஆயிரத்தை கைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
÷அப்போது கீழே 10 ரூபாய் நோட்டு கிடந்ததுள்ளது. அதனை செல்வராணி எடுக்க முயன்ற போது, அவரது பணப்பையை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.
÷இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணப்பையைப பறித்துச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.