வரதட்சிணைக் கேட்டு மிரட்டல்: கணவர் கைது
சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
÷சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள்
உள்ளனர்.
Advertisement
÷இதனிடையே, கடந்த சில மாதங்களாக உஷாராணியிடம் வரதட்சிணைக் கேட்டு கணவர் மணிகண்டன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
÷இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், மாமனார் கணேசன்,மாமியார் தங்கம், மைத்துனர் செல்வராஜ் ஆகியோர் உஷாராணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
÷இது குறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
÷இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்தனர்.
÷மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனின் தந்தை, தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.