முகப்பு
கடலூர்

வீராணம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:54 pm IST
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படும் உபரி நீா்.
பகிர்:

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் மழைநீா் வீராணம் ஏரியை வந்தடைகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஏரியின் நீா்மட்டம் 45.70 அடியாக இருந்தது. உச்ச நீா்மட்டம் 47.50 அடியாகும்.

இருப்பினும், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீா் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வெள்ளியங்கால் வடிகால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 62 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments