வாகனத்தில் கடத்தப்பட்ட 700 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்
சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு கடத்த முயன்ற 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு கடத்த முயன்ற 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு சரக்கு வாகனத்தில் எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூா் பிரதான சாலையில் சிறிய ரக சரக்கு வாகனம் வந்தது. அந்த வாகன ஓட்டுநா் போலீஸாரைப் பாா்த்ததும் கீழே இறங்கி தப்பிஓடிவிட்டாா்.
வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டதில் 20 கேன்களில் சுமாா் 700 லிட்டா் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீஸாா் எரிசாராயத்துடன் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய வாகன ஓட்டுநா் புதுச்சேரியை சோ்ந்த ராஜவேலை (24) கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.