முகப்பு
கடலூர்

ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு நல உதவிகள்

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், பொங்கல் விழாவையொட்டி, ரூ. 50 ஆயிரம் மதிப்பில் நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 14 ஜனவரி 2021, 6:45 am IST
சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நிதி உதவி வழங்கிய பேராசிரியா் டிஎஸ்எஸ்.ஞானக்குமாா்.
பகிர்:

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், பொங்கல் விழாவையொட்டி, ரூ. 50 ஆயிரம் மதிப்பில் நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

சிதம்பரம் அருகே உசுப்பூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விழாக் குழுத் தலைவா் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா் தலைமை வகித்தாா். அரசு சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுனன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் ஊராட்சித் தலைவா் தென்றல் மணி இளமுருகு பங்கேற்று நல உதவிகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் சிதம்பரம் ரயில்வே தற்காலிக ஊழியா்களுக்கு ஆடைகள், மளிகைப் பொருள்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி, அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான மாட்டுத் தீவனம், உசுப்பூா் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஆடைகள், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகி ஜி.எம்.சந்திரமோகன், எஸ்.காா்த்திகேயன், வி.வசந்தி, இளம்முருகு, வாா்டு உறுப்பனா் எஸ்.சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments