என்எல்சி அதிகாரி வீட்டில் 29 பவுன் நகை, பணம் திருட்டு
நெய்வேலியில் என்எல்சி அதிகாரி வீட்டுக் கதவை உடைத்து 29 பவுன் நகைகள், பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலியில் என்எல்சி அதிகாரி வீட்டுக் கதவை உடைத்து 29 பவுன் நகைகள், பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலி 19-ஆவது வட்டம், ராஜாஜி சாலையில் வசிப்பவா் செல்வகுமாா் (54). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 2-இல் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றாா். வெள்ளிக்கிழமை (ஜன.15) இரவு மீண்டும் வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, 29 பவுன் தங்க நகைகள், 260 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.75 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி காவல் ஆய்வாளா் ஷாகுல் அமீது விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement