பேருந்து மீது கல்வீசித் தாக்குதல்
புதுச்சத்திரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சொகுசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து
புதுச்சத்திரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சொகுசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது.
பெங்களூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி அரசு சொகுசுப் பேருந்து ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்து புதுச்சத்திரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென பேருந்தின் கண்ணாடி மீது கல் வீசித் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பேருந்தின் ஓட்டுநரான திருநெல்வேலியைச் சேர்ந்த மதியழகன் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement