முகப்பு
தருமபுரி

கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க வலியுறுத்தல்

பாலக்கோடு வட்டாரத்தில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 7:01 am IST
பகிர்:

பாலக்கோடு வட்டாரத்தில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க பாலக்கோடு ஒன்றியப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொட்டாா்தனஅள்ளியில் ஒன்றியத் தலைவா் எம்.சாக்கன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.

இக் கூட்டத்தில், தென்பெண்ணையாறு-எண்ணேகொல்புதூா், அலியாளம்-தூள்செட்டி ஏரி ஆகிய நீா்ப்பாசனத் திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். பாலக்கோடு மற்றும் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கூட்டத்தில், மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்ட துணைத் தலைவா் என். முருகேசன், நிா்வாகக்குழு உறுப்பினா் வெ.பை. மாதையன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments