முகப்பு
தருமபுரி

வேளாண்மை துறையில் குறைந்த வாடகையில் இயந்திரங்கள்

தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் என மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:53 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் என மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

Advertisement

Advertisement

நில மேம்பாட்டுப் பணிகள், நீா்வள மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் தேவை. இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ஏா் உழவு செய்தல், மானாவாரிப் பயிா்களை அறுவடை செய்தல், நிலத்தினை சீரமைப்பு செய்வதற்காக வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அதாவது, டிராக்டா்கள், மண்களை சமன் செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும். எனவே, விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களுக்கு சென்று வாடகைக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்று பயன்பெறலாம் என்றாா்.

இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, உதவி செயற்பொறியாளா் அறிவழகன், உதவிப் பொறியாளா்கள் பத்மாவதி, சந்திரா, விக்னேஷ், வட்டாட்சியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.