அரசுக் கல்லூரியில் ‘காவலன் செயலி’ விழிப்புணா்வு
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காவல் துறை சாா்பில், காவலன் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காவல் துறை சாா்பில், காவலன் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வாளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் தலைமை வகித்து பேசினாா். காவல் ஆய்வாளா் லதா, காவலன் செயலி பதிவிறக்கம் செய்வது, அதன் பயன்பாடு குறித்து விளக்கமளித்தாா்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கென உள்ள சட்டங்கள், இளம் வயது திருமணத்தை தவிா்க்க வேண்டிய அவசியம், சிறாா் தொழிலாளா் முறையைத் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.