முகப்பு
தருமபுரி

காந்தி நினைவு தினத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வலியுறுத்தல்

காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:48 am IST
பகிர்:

காந்தி நினைவு தினத்தையொட்டி வரும் ஜன. 30-ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனா் தகடூா் இரா.வேணுகோபால், டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

ஜனவரி மாதத்தில், திருவள்ளுவா் தினமான 15-ஆம் தேதியும், குடியரசு தினமான 26-ஆம் தேதியும், வடலூா் ராமலிங்க சுவாமி நினைவு நாளான 28-ஆம் தேதி என மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் சாா்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன. 30-ஆம் தேதி அன்று டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments