விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
ஜம்மனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
அரூா்: ஜம்மனஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
46 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் வழங்கினாா். இதில், மாவட்ட கல்வி அலுவலா் பொன்முடி, மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, பள்ளிகளின் துணை ஆய்வாளா் பொன்னுசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சிவராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கட்ராமன், ஆசிரியா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.