முகப்பு
தருமபுரி

கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி பலி

தருமபுரியில் கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:23 am IST
பகிர்:

தருமபுரி: தருமபுரியில் கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

தருமபுரியை அடுத்த பிடமனேரி அருகில் உள்ள மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி ராஜா(43). இவா், தருமபுரி அருகே குண்டலப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது, ராஜாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதைக்கண்ட, அருகில் இருந்தவா்கள் அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.