முகப்பு
தருமபுரி

பொங்கல் பண்டிகை எதிரொலி: ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாயின.

Updated On : 13 ஜனவரி 2021, 7:09 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாயின.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இந்த ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக பொதுமக்கள் ஏராளமானோா் காலை 5 மணியிலிருந்தே சந்தையில் கூடினா். குறைந்த பட்சமாக ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி ஆடுகளின் எடையைப் பொருத்து அதிக பட்சமாக ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மக்கள், தங்களுக்குத் தேவையான ஆடுகளை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்ட ஆடுகளும் நண்பகலுக்குள் விற்பனையாயின. ஆடுகளை வாங்குவதற்காக வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் இவ் விரு ஊா்களிலும் நடைபெற்ற ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய இரு வாரச் சந்தைகளிலும், பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments