முகப்பு
தருமபுரி

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

பாப்பாரப்பட்டியில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 6:11 am IST
பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் பேரூராட்சி மண்டல இயக்குநா் கண்ணன்.
பகிர்:

பாப்பாரப்பட்டியில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின் கீழ் கடை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் கடன் பெற ஏராளமான கடை வியாபாரிகள் விண்ணப்பித்திருந்தனா்.

இதில் தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி பாப்பாரப்பட்டி தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மண்டல பேரூராட்சிகளின் இயக்குநா் கண்ணன் கலந்து கொண்டு,தமிழ்நாடு கிராம வங்கியின் மூலம் பிரதமரின் சேவாநிதி திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் காசோலையினை வழங்கினாா்.

இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், வங்கி மேலாளா் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments