முகப்பு
தமிழ்நாடு

மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 22 ஜூன் 2026, 7:12 pm IST
தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்
பகிர்:

மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே. மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

மதுரை காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக கபில் குமார் சாரக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ். ராஜேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக அனில் குமார் கிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் காவல் ஆணையராக ஜோஷி நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக தேன்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ் மணி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

summary

Fourteen IPS officers, including City Police Commissioners, have been transferred.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments