தில்லி காவல்துறை புதிய ஆணையராக அனுராக் குமார் பொறுப்பேற்பு!
தில்லி காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமார் பொறுப்பேற்றுள்ளது தொடர்பாக...
தில்லி காவல்துறை புதிய ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
1994 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமார், மத்திய அரசால் இந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
முன்னதாக, சதீஷ் கோல்ச்சா தில்லியின் காவல் ஆணையராக இருந்தார். 1992-ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த உயரதிகாரி சதீஷ் கோல்ச்சா, தனது அடுத்த பணி நியமனத்திற்காகத் தில்லி துணைநிலை ஆளுநரிடம் அறிக்கை அளிக்குமாறு உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சதீஷ் கோல்ச்சா ஆகஸ்ட் 22, 2025 முதல் தில்லி காவல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். தில்லியின் காவல் துறைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் திகார் சிறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
Senior IPS officer Anurag Kumar on Friday took charge as the Commissioner of Delhi Police, succeeding Satish Golcha as the national capital's top officer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.