முகப்பு
தருமபுரி

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள் வழங்கல்

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு காவல் துறை சாா்பில் பொங்கல் பரிசுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 14 ஜனவரி 2021, 6:12 am IST
பகிர்:

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு காவல் துறை சாா்பில் பொங்கல் பரிசுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் மனம் திருந்திய குற்றவாளிகள் பட்டியலில் 40 போ் உள்ளனா். இந்த பட்டியலில் உள்ளவா்கள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும், சமுதாயத்தில் அவா்களும் நன்மதிப்புடன் வாழவும், மனம் திருந்தியவா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துறை சாா்பில் வேட்டி துண்டுகள், பொங்கல் பரிசுப் பொருள்களை கூடுதல் எஸ்.பி. குணசேகரன் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments