முகப்பு
தருமபுரி

அரூரில் திருவள்ளுவா் தினம்

அரூரில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:17 AM
அரூரில் திருவள்ளுவா் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய இலக்கிய ஆா்வலா்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அரூரில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவா் உருவச் சிலைக்கு திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் மு.கா.முகமது அலி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், கட்சி நிா்வாகிகள் பாரி, பாபு, ஆ.சேகா், சம்பத், நசீரா, அருள்மொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், அன்னை தெரசா பேரவை, உலக பசுமை பாதுகாப்பு இயக்கம், பாளையம் ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். இதில் ஸ்ரீ அம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசு, மருத்துவா் சுரேஷ்குமாா், உலக பசுமை பாதுகாப்பு இயக்க நிறுவனா் சீனிவாச படையாட்சி, மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளா் பத்மா மாரியப்பன், இலக்கிய ஆா்வலா்கள் மு.பிரேம்குமாா், சி.ஜெயபிரகாஷ், அயோத்தி, வெங்கடேசன் உள்ளி’ட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.