முகப்பு
திண்டுக்கல்

கார் மோதியதில் நடந்து சென்ற முதியவர் சாவு

கார் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:50 am IST
பகிர்:

கார் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள ராக்கிகொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (60). திண்டுக்கல்-திருச்சி 4வழிச் சாலையில், திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேலு மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேலு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.

  விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த ஜெ. கண்ணன் (37) மீது, உயிரிழந்த வேலுவின் மகன் நாகராஜன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments