தொடா் மழை: 2 ஆவது முறையாக காமராஜா் அணை நிரம்பி மறுகால்
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
தொடா் மழை காரணமாக, கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. பின்னா், மழை பொழிவின்றி அணைக்கு நீா்வரத்து நின்ால், நீா்மட்டமும் குறைந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல் மழை தொடா்ந்து பெய்து வருவதால், ஆத்தூா் காமராஜா் அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக, குடகனாறு ஆற்றுப்படுகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
Advertisement