கல்லூரி மாணவி தற்கொலை
பெங்களூர் யஸ்வந்தபுரம் கே.என்.எக்ஸ்டன்ஷனை சேர்ந்தவர் நாகப்பா. மாநகர போக்குவரத்து பேருந்தின் நடத்துநராகப்
பெங்களூர் யஸ்வந்தபுரம் கே.என்.எக்ஸ்டன்ஷனை சேர்ந்தவர் நாகப்பா. மாநகர போக்குவரத்து பேருந்தின் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது இரண்டாவது மகள் மேகனா (17). இவர் பியுசி இரண்டாம் ஆண்டு படித்து வந்தாராம். வியாழக்கிழமை மாலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.